கோவையில் சோகம்.. ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சிறுவனின் பெற்றோரை தேடும் போலீஸ்

கோவை: கோவை இருகூர் (Irugur) காந்தி நகர், சௌடேஸ்வரி நகர் ரயில்வே கேட் பகுதியில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கினாரா? அல்லது விளையாடச் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்ததா? என்பது குறித்து உடனடி தகவல் தெரியவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement

உயிரிழந்த சிறுவன் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? அவரது பெற்றோர் யார்? என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், போலீசார் அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சிறுவனின் புகைப்படத்தை சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து, “இந்த சிறுவனை யாருக்காவது தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும்” என போலீசார் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுவனின் முகவரி மற்றும் பெற்றோர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வெளியான கருப்பு திரைப்படம்- கோவையில் உற்சாக கொண்டாட்டம்…

கோவை: சூர்யாவின் கருப்பு திரைப்படம் வெளியானதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சூர்யா, திர்ஷா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் நேற்று...

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.