சாலையில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்… பைக்குகளை பறிமுதல் செய்த போலீஸ்..!

கோவை:கோவை சரவணம்பட்டியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களுக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் எச்சரித்தனர்.

Advertisement

கோவை மாநகரில் விபத்துகள் மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சரவணம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 4 இளைஞர்கள் சாலையில் ஆபத்தான முறையில் ஆட்டம் போட்டபடி அதிவேகமாக சென்றனர்.

இந்த காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனை கண்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, வீடியோவில் பதிவான மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களை வைத்து கோவை மாநகர போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.

Advertisement

அதில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவர்கள் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கியதும், அவர்களில் ஒருவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாததும் தெரியவந்தது.

இதையடுத்து, 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.5 ஆயிரம் மற்றும் ஆபத்தான முறையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக ரூ.12 ஆயிரம் என மொத்தம் ரூ.19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

பின்னர், 4 பேரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் கோர விபத்து; கல்லூரி மாணவி பரிதாப பலி!

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிராமி செவிலியர் கல்லூரி அருகே இன்று பிற்பகல் ஏற்பட்ட சாலை விபத்தில், இரண்டாம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்தார். மேலும், இரண்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...