காவல் நிலையத்தில் கையகப்படுத்தப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள போலீசார் அறிக்கை..

கோவை: சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கையகப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை பெற்றுக்கொள்ள போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கோவை மாநகர் சரணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களோடு பெற்றுக்கொள்ள சரவணம்பட்டி போலீசார் பொதுமக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று நின்றிருந்த, ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் இல்லாத, சேஸ் நம்பர்கள் சரிவர தெரியாமல் இருந்த சுமார் 73 இருசக்கர வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டு 106 பிஎன்எஸ்எஸ் வழக்கு பதிவு செய்து வாகனங்கள் சரவணம்பட்டி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இருசக்கர வாகனங்களை பொதுமக்கள் தவறுதலாக நிறுத்தியிருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ உரிய ஆவணங்களுடன் வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவைக்கு இன்று கனமழை எச்சரிக்கை…

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழையானது பெய்து வருகிறது. குறிப்பாக கோவை நீலகிரி திருப்பூர்...

Latest News Coimbatore

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.