கோவை: கோவை மின்தடை அறிவிப்பு குறித்து மின்வாரிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வந்தது.
இந்த நாளில் மின்வாரிய பணியாளர்கள், அந்தந்த பகுதிகளில் மின் பராமரிப்பு பணியை மேற்கொள்வார்கள். இதற்காக காலை 9 மணி முதல் 4 மணி வரை விநியோகம் துண்டிக்கப்படும்.
Advertisement

இந்த நிலையில், கோவையில் சமீப நாட்களாக மின்தடை அறிவிப்புகள் வருவதில்லை. ஏன் அறிவிப்பு கொடுப்பதில்லை என்று நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் வாசகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தனர்.
கோவை மின்தடை
இதனிடையே மின்தடை குறித்து மின்வாரிய முதன்மை பொறியாளரிடம் கேள்வியெழுப்பினோம்.
அதற்கு, “பள்ளி தேர்வுகள் நடைபெற்று வருவதால், மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குப் பிறகு மின்தடை அறிவிப்புகள் வெளியாகும்” என்றார்.
எனவே இன்னும் 20 நாட்களுக்கு கோவையில் எங்கும் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நாள் மின்தடை ஏற்படாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.