மும்பையில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்- இருவர் கைது…

கோவை: மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூபாய் 5 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இரண்டு பேரை கைது செய்தனர்.

கோவை புட்டுவிக்கி சாலை கரும்புக்கடை போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு உள்ள கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சூலூரைச் சேர்ந்த சந்தோஷ், மதுக்கரை சேர்ந்த சந்தான்குமார் என்பதும் போதை மாத்திரைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதை அடுத்து போலீசார் அந்த இரண்டு பேரையும் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து 1,448 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் அந்த இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கைதான சந்தோஷ், சந்தான் குமார் ஆகிய இரண்டு பேரும் தேங்காய் உரிக்கும் வேலைக்குச் சென்று வருகிறார்கள். இதில் சந்தான்குமாரின் பூர்வீக மத்திய பிரதேசம் ஆகும். இதனால் அவர் மும்பையில் தனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி கோவையில் கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளார்.

சந்தோஷுடன் சேர்ந்து ஒரு மாத்திரையை ரூபாய் 30 க்கு வாங்கி, ரூபாய் 350 வரையும், அதை போதை ஊசியாக ஒரு ஊசி கிருபை 1,500 வரையும் விற்பனை செய்து உள்ளார். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள்- ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா...

Latest News Coimbatore

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...