கோவை மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள்- ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மற்றும் மத்திய மண்டல எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் உள்ள கிளை வாய்க்காலினை அளவீடு செய்து தூர்வாருதல் தொடர்பாக, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து, கிழக்கு மற்றும் மத்திய மண்டல எல்லைகளுக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களிடம் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டாமல், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டுமென அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்குட்பட்ட புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் 46 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி செய்யும் (Solar Panel) சோலார் பேனலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் புதிதாக உயர்மட்ட கண்காணிப்பு கோபுரங்கள், தெருவிளக்குகள் மற்றும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

மும்பையில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்- இருவர் கைது…

கோவை: மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூபாய் 5 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார்...

Latest News Coimbatore

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...