கோவை: கோவை மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இன்று (24.06.2026) கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையை பொறுத்தவரை எல்லை பகுதிகளான சூலூர், அன்னூர், கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், ஆனைக்கட்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம் என எண்ணப்படுகிறது.



