கிறித்துவ தேவாலய பணியாளர்கள், உபதேசியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்…

கோவை: கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் சார்பில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

அதன்படி, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, சமச்சடங்கு செலவிற்கான தவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குகண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படுகின்றது.

இந்த உதவிகள் பெற கிறித்துவ இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள், கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள் சீசபிள்ளைகள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள்தொழுநோயாளியர், மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு முறையான மாதாந்திர ஊதியம் என்று இல்லாமல் உள்ளிட்ட பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.

மேற்படி நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுவதை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணைய தளம் (www.cwb.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் www.uwb.tn.gov.in இணையதளம் மூலமும் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த முக்கிய நபர் பிடிபட்டார்…

கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர் பிடிபட்டார். கோவை மாநகரில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர். கோவை தொண்டாமுத்தூர் தேவராயம்புபுரம் பகுதியைச் சேர்ந்த...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...