கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: டவுன்ஹாலில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை சேதப்படுத்தும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாநகர் டவுன்ஹால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களின் சீட்டுகளை, மர்ம நபர் ஒருவர் பிளேடால் கிழித்துச் சேதப்படுத்தும சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

​கோவையின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான வணிகப் பகுதிகளில் ஒன்றாக டவுன்ஹால் பகுதியில் துணிக்கடைகள் அருகே இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், அங்கு உள்ள பார்க்கிங் ஏரியாவில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்த பைக்குகளின் சீட்டுகளை மர்ம நபர் ஒருவர், தனது கையில் வைத்து இருந்த கூர்மையான பிளேடால் கிழித்து சேதப்படுத்தி விட்டு, ஒன்றும் தெரியாதது போல சென்றுள்ளார்.

​பின்னர் அங்கு வந்து பார்த்த வாகன ஓட்டிகள், பைக்குகளின் சீட்டுகள் அனைத்தும் கிழிந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் இதனை செய்தது பதிவாகி இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள் அங்கிருந்து காவலர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர் அந்த நபர் யார்? அவரை கைது செய்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்

மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றால் அவரது வீட்டாரிடம் இது குறித்து தெரிவித்து அவரை வீட்டிலேயே வைத்திருக்கவோ குடும்பத்தினர் யாரும் இல்லாத பட்சத்தில் காப்பகத்தில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

​இந்த அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி தற்பொழுது வைரலாகி வருகிறது.


Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆவின் பால் முகவர்கள்…

கோவை: கோவையில் ஆவின் பால் முகவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆவின் பால் முகவர்கள் உள்ளனர். அவர்கள் நாள்தோறும் பால்பாக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெறுவதற்கும்...

Latest News Coimbatore

Video

கோவையில் முதியவரிடம் தகராறில் ஈடுபட்ட திருநங்கை- வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி…

கோவை அன்னூரில் முதியவரிடம் பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி, போலீஸ் விசாரணை கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.