75 வயதில் உடல் உறுப்பு தானம்- கோவை முதியவர் உடலுக்கு அஞ்சலி…

கோவை: கோவையில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Advertisement

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 75 வயதான கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 1ம்தேதி சாலை விபத்தில் சிக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து மூளைச்சாவு பற்றியும் உடல் உறுப்பு தானம் பற்றியும் மருத்துவர்கள் அவர்களது குடும்பத்தினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்தனர்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி ஆலோசனைப்படி அவரது ஒரு சிறுநீரகம் மற்றும் 2 கருவிழிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டது.

Advertisement

உடல் உறுப்பு தானம் செய்த கோபாலகிருஷ்ணனின் உடலுக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மரியாதை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...