75 வயதில் உடல் உறுப்பு தானம்- கோவை முதியவர் உடலுக்கு அஞ்சலி…

கோவை: கோவையில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 75 வயதான கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 1ம்தேதி சாலை விபத்தில் சிக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

Advertisement

அதனைத் தொடர்ந்து மூளைச்சாவு பற்றியும் உடல் உறுப்பு தானம் பற்றியும் மருத்துவர்கள் அவர்களது குடும்பத்தினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்தனர்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி ஆலோசனைப்படி அவரது ஒரு சிறுநீரகம் மற்றும் 2 கருவிழிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டது.

உடல் உறுப்பு தானம் செய்த கோபாலகிருஷ்ணனின் உடலுக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மரியாதை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

விற்பனை செய்து தருவதாக வாங்கிய ரூபாய் 6 கோடி தங்கம், வெள்ளி கட்டிகளுடன் மாயமான இரண்டு வியாபாரிகள் கைது!!!

கோவை: கோவையில் விற்பனை செய்து தருவதாக வாங்கிய ரூபாய் ஆறு கோடி தங்கம், வெள்ளிக் கட்டிகளுடன் மாயமான வியாபாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகரப் பகுதியில் ஏராளமான நகை பட்டறைகள்...

Latest News Coimbatore

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.