கோவை: தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் சார்பில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-2027 விண்ணபிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தகுதிபடைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையும்.அதனுடன் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதும் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
இதனடிப்படையில் 2026-27.ஆம் ஆண்டிற்கான “சமூக நல்லிணக்க ஊராட்சி” விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்தினையும், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து 15.07.2026 0 5.00 விண்ணப்பிக்கலாம்.
இவ்விருதிற்கான விண்ணப்ப படிவத்தினை https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/social_award_app_26_27.pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கோயம்புத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


