கோவை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் வருகின்ற 10.07.2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், உயர்கல்வியில் சேருவதற்கு தேவையான சான்றுகள், அரசு சார்ந்த உதவிகள் மற்றும் அரசு சார்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.
இம்முகாமில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ளவும்மேலும் அரசு ஐடிஐ பாலிடெக்னிக் மற்றும் அரசு கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரிவேளாண் கல்லூரி, துணை மருத்துவம்சட்டம் போன்ற கல்லூரிகள் சார்ந்த சேர்க்கை தவகல்களை பெற்று பயன்பெறவும், கல்விக் கடன் சார்ந்த உதவிகளைப் பெற்றிடவும்,தவறாது இம்முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் முகாமில் பங்குபெறும் மாணவர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளான வங்கி கணக்கு புத்தகம், ஆதார், சாதிச் சான்று, மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை போன்றவைகளை தவறாது எடுத்துவர கேட்டுக்கொள்ளப்படுகிறது சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்கள் : 9487047568, 978885829, 8754898863 ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


