கோவை: கோவை மாவட்டத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம், கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் தொடர்புடைய ஹமீத் யாசின் (22), மகன் மோகன்ராஜ் (21), மற்றும் மாரிமுத்து (23) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கின் குற்றவாளிகளான குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.


