மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறிப்பு… போலீசார் அதிரடி நடவடிக்கை!

கோவை: துடியலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Advertisement

துடியலூர் அருகே பன்னிமடை சாலை, ராமகிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரத் (20). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று சரத், தனது நண்பர்களுடன் பழனிக்கவுண்டர் புதூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார்.

Also Read: கோவையில் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்; திருநங்கைகள் 4 பேர் கைது

Advertisement

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், திடீரென சரத் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சரத் அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்போனை பறித்துச் சென்றவர்கள் புதுப்பள்ளம் அஸ்வின் நகரைச் சேர்ந்த பட்டறை தொழிலாளி சுபாஷ் (21), சாய்பாபா காலனி பெரியார் நகரைச் சேர்ந்த காளான் கடை ஊழியர் சூர்யா (19) என்பது தெரியவந்தது.

Advertisement

Also Read: கோனியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு- அதிகாரிகள் சஸ்பெண்ட்- அமைச்சர் நடவடிக்கை…

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய சந்துரு என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சுபாஷ் மற்றும் சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் மரத்தை வெட்டியவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம்- பொதுமக்கள் வரவேற்பு…

கோவை: கோவையில் அனுமதியின்றி மரத்தை வெட்டிய நபர்களுக்கு 2.10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பாராட்டுதலை பெற்று வருகிறது. கோவை மாநகர் வெரைட்டி ஹால் பகுதியை சேர்ந்த சங்கர்லால் என்பவர் அவரது சொந்த இடத்திற்கு...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...