கோவை: வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை பணி நியமன முகமை மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் “வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை” (ATMA) திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண்மை இயக்குநர், அறிவுரைப்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் ATMA திட்டத்தின் கீழ் காலியாக உள்ள வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர்கள் (Block Technology Managers- BTM) உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் (Assistant Technology Managers ATM) ஆகிய காலி பணியிடங்களை தகுதியான பணிநியமன முகமை (Recruitment Agency) மூலமாக தற்காலிகமாக நிரப்பிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் தகுதியும் அனுபவமும் கொண்ட திறமையான பணிநியமன முகமைகளிடமிருந்து (Recruitment Agency) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதியான பணிநியமன முகமை (தேவைப்படும் தகுதிகள் 1 முன் அனுபவம், 2. சேவை கட்டண விவரம் மற்றும் 3. பதிவு எண்) தங்களது விவரங்கள் மற்றும் ஒப்பந்த புள்ளியுடன் திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், தடாகம் ரோடு, ஜி.சி.டி. அஞ்சல், கோயம்புத்தூர்-13 என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ 27.08.2026க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.





