கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் முகாம்… 7 முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்!

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு கடன் உதவி வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வரும் 7-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

Advertisement

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் நடைபெறும் இந்த கடன் முகாம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவித்தனர்.

இந்த முகாமில் பங்கேற்கும் சாலையோர வியாபாரிகள், தங்களிடம் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்கள் மற்றும் குறிப்பிட்ட வார்டு அலுவலகங்கள், சமுதாயக்கூடங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.

Advertisement

கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான கடன் முகாம் மண்டல அலுவலகம், சவுரிபாளையம் சமுதாயக்கூடம் மற்றும் காளப்பட்டி, உப்பிலிபாளையம், சேரன் மாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்களில் நடைபெறும்.

மேற்கு மண்டலத்தில் மண்டல அலுவலகத்துடன், வடவள்ளி, கவுண்டம்பாளையம், வேலாண்டிபாளையம் மற்றும் அண்ணா மார்க்கெட் பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்களில் முகாம் நடைபெறுகிறது.

Advertisement

தெற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் மண்டல அலுவலகம், செல்வபுரம், போத்தனூர், குறிச்சி மற்றும் கோவைப்புதூர் வார்டு அலுவலகங்களில் கடன் முகாம் நடைபெற உள்ளது.

வடக்கு மண்டலத்தில் மண்டல அலுவலகத்துடன், ஆவாரம்பாளையம், காந்திமாநகர், சரவணம்பட்டி மற்றும் துடியலூர் வார்டு அலுவலகங்களில் முகாம் நடைபெறுகிறது.

மத்திய மண்டலத்தில் மண்டல அலுவலகம், ராமநாதபுரம் சமுதாயக்கூடம் மற்றும் காந்திபுரம், சிவானந்தாகாலனி, ரத்தினபுரி ஆகிய பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்களில் முகாம் நடைபெற உள்ளது.

சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அருகிலுள்ள முகாம் நடைபெறும் இடத்துக்குச் சென்று தேவையான ஆவணங்களுடன் கலந்து கொண்டு கடன் தொடர்பான விவரங்களை அறிந்து பயன்பெறலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, முகாம் நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சாலையோர வியாபாரிகள் தங்களது ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...