சாமியார் வேடத்தில் விபூதி அடிக்கப்பார்த்த ஆசாமி மருதமலையில் கைது!

கோவை: மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் சாமியார் போல வேடமணிந்து அமர்ந்திருந்த குற்றவாளியை போலீசார் ‘லபக்’ என்று பிடித்தனர்.

கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில், குற்றச் செயல்களில் ஈடுபட்டு, நீதிமன்றங்களில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பிடிவாரண்ட பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள நபர்களை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாநகர போலீசார் படாதபாடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே குற்றவாளி ஒருவர் மருதமலை அருகே மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அடிவாரம் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, சாமியார் போல வேடமணிந்து, சாமியர்களுடன் சாமியாராக அமர்ந்திருந்தவர், போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமறைவு குற்றவாளி என்பது இருந்தது தெரியவந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அன்னூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பவர் போதைப் பொருள் தடுப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சாமியார் உடையில் கழுத்தில் மாலை அணிந்திருந்த மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் மருதமலை சுற்றுவட்டாரத்தில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.