Header Top Ad
Header Top Ad

கோவை, திருப்பூர், சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!

கோவை: கோவை வழியாக பீஹாருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

போத்தனூர் – பரவுனி (பீஹார்) இடையிலான திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண் 06055) இயக்கப்பட உள்ளது.

Advertisement

Single Content Ad

ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமை நாட்களில் போத்தனூரில் இருந்து காலை காலை 11.50 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பீஹார் மாநிலம் பரவுனி சென்றடையும்.

இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் மொத்தம் 5 சேவைகள் இயக்கப்பட உள்ளன.

மறுமார்க்கமாக ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 27 வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பீஹாரில் இருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை 3.45 மணிக்கு போத்தனூர் வந்தடையும்.

  • AC 3-டையர்
  • ஸ்லீப்பர் வகுப்பு
  • பொது வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி
  • லக்கேஜ் & பிரேக் வண்டி

போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், குதூர், நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விஸாகபட்டினம், ராயகடா, ராஞ்சி, ஹாட்டியா, சம்பல்பூர், ரூர்கெலா, ராஞ்சி, தன்பாத், மதுபூர், ஜாசிடிஹ், கியூல் உள்ளிட்ட பல்வேறு நிறுத்தங்கள்.

Recent News

Single Sidebar Ad

Latest Articles