Header Top Ad
Header Top Ad

கோவை அரசு பொருட்காட்சி தொடங்க உள்ளது மக்களே!

கோவை: கோவை அரசு பொருட்காட்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஆண்டுதோறும் கோவையில் அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இந்த பொருட்காட்சியில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அரங்குகள், தனியார் கடைகள், மேஜிக் ஷோ, ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

Advertisement

Single Content Ad

இந்த நிலையில், நடப்பு ஆண்டில் கோவை அரசு பொருட்காட்சி வரும் ஞாயிறன்று (ஏப்ரல் 27ம் தேதி) வ.உ.சி மைதானத்தில் மாலை 5 மணிக்கு தொடங்க கோவை மாவட்ட நிர்வாகம் உத்தேசித்துள்ளது,

அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் இன்னும் இறுதி முடிவு எட்டபடவில்லை. இருந்த போதிலும், ஒரு சில தினங்களில் பொருட்காட்சி தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பொருட்காட்சியில் 30க்கும் மேற்பட்ட அரசுத்துறை அரங்குகள், 20க்கும் மேற்பட்ட தனியார் அரங்குகள், கேளிக்கை ராட்டினங்கள், ஐஸ்கிரீம், அப்பளம், பானிபூரி உள்ளிட்ட கடைகள், ஸ்நோ வேர்ல்ட், 3d ஷோ போன்ற அம்சங்கள் இடம்பெறுகின்றன.

இதில், நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தோடு ஜாலியா ஒரு பட்ஜெட் ரவுண்ட் அடிக்க நினைக்கும் மக்கள் இந்த பொருட்காட்சிக்கு ஒரு விசிட் அடிக்கலாம் மக்களே…

Recent News

Single Sidebar Ad

Latest Articles