கோவையில் மாஜி போலீஸ்காரரை தாக்கிய தந்தை, மகள் மீது வழக்கு

கோவையில் மாஜி போலீஸ்காரரை தாக்கிய தந்தை, மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது…

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் மணி(63). ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது தாயார் மணியக்காரம்பாளையம் இளங்கோவன் நகரில் வசிக்கும் மற்றொரு மகன் நடராஜன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், உடல் நல பாதிப்பு ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரை பார்க்க மணி சம்பவத்தன்று தனது சகோதரர் வீட்டுக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த நடராஜனுக்கும், மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் மற்றும் அவரது மகள் ரஞ்சனி ஆகியோர் மணியை தாக்கினர். சப்பாத்தி கட்டையால் தாக்கியதில் கை உள்ளிட்ட இடங்களில் மணிக்கு காயம் ஏற்பட்டது.

Advertisement

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீசார் நடராஜன், ரஞ்சனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை விருந்தீஸ்வரர் கோவில் திருவீதி உலா அன்னதானம்…

கோவை: வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் பிரதோசம் விழா சுவாமி திருவீதி உலா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...