சூலூரில் போதையில் கத்தியுடன் சுற்றிய நபருக்கு தர்ம அடி!

கோவை: சூலூர் அருகே போதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் போதையில் வந்த ஆசாமி ஒருவர் அங்கும் இங்கும் தள்ளாடிக்கொண்டு கூச்சலிட்டார். அவரிடம் கேள்விகேட்ட பொதுமக்களை தரக்குறைவாகப் பேசி தாக்க முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது, கத்தி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த நபரைக் கட்டி வைத்த பொதுமக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், அந்த போதை ஆசாமியைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் தஞ்சையைச் சேர்ந்த உதயகுமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் திமுக பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை…

கோவை: கோவையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...