தயாராக இருங்கள்… கோவை, நீலகிரி உட்பட 7 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு!

கோவை: மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, நீலகிரி உட்பட 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் 13, 14 மற்றும் 15ம் தேதிகளில் மிக கனமழைக்கு (ஆரஞ்சு அலெர்ட்) வாய்ப்புள்ளதாகவும், அதே நாட்களில், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு (மஞ்சள் அலெர்ட்) வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

இதனிடையே மேற்கூறிய 7 மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை முக்கிய உத்தரவுகளை பீறப்பித்துள்ளது.

அதில், மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் பேரிடர் கால நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், மழையை எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்,

7 மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புப் பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும், எதிர்பாராத விதமாக பேரிட ஏற்பட்டால் உடனே மாநில பேரிடர் மேலாண்மைத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தற்போது பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஆளுநர் ஆட்சியா? விஜய்க்கு உரிமையை கொடுங்க.. ஆதரவாக குதித்த வில்லன்!

விஜய் 108 இடங்களில் வென்ற நிலையில், அவரை முதலமைச்சராக விடாமல் ஆளுநர் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலமைச்சராவாரா விஜய்? 2026 சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் உள்ளது. ஆனால் 108 இடங்களை வென்ற...

Video

கோவையில் குல தெய்வக்கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா…

கோவை: கோவை அன்னூர் அருகே குல தெய்வமான மதுர காளியம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் கிராமத்தில் உள்ள மதுர காளியம்மன் கோவில்...