ராஜ்நாத் சிங் மருதமலையில் சாமி தரிசனம்; கோவில் நிர்வாகம் வரவேற்பு

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் மகேஷ்குமார் வரவேற்பு அளித்தார்.

கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில், பாதுகாப்புத் துறை அமைச்சரின் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது மகளும் மருமகனும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து, இன்று தனது மனைவியை பார்க்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவை வந்தார்.

தொடர்ந்து, தனது மனைவியை மருத்துவமனையில் பார்த்துவிட்டு மாலை 6:15 மணி அளவில் சாமி தரிசனம் செய்ய மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார்.

அங்கு, அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் மகேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர், ஆதி மூலஸ்தான முருகப்பெருமானையும், பஞ்சமுக விநாயகரையும் தரிசனம் செய்தார்.

அதன்பின், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து, 6:45 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் வருகையை ஒட்டி, கோவில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பத்து சட்டமன்ற...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...