Red Alert Coimbatore: அதி கனமழை எச்சரிக்கை விடுப்பு

Red Alert Coimbatore: கோவை மாவட்டத்தில் இந்த வாரம் ஒரு நாள் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

Advertisement

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 3,4) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுகிறது. கோவை, நீலகிரி மட்டுமல்லாது கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறையிலும் இந்த இரண்டு நாட்கள் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

Advertisement

ஆகஸ்ட் 5ம் தேதி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்படுகிறது. அதாவது இந்த நாளில் 204 மி.மீட்டர் வரை மழை பதிவாகலாம்.

இதே நாளில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுகிறது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

வானிலை மையம் கொடுக்கும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை நமது தளத்தில் வெளியிடுகிறோம்.

Recent News

நவம்பர் 1ம் தேதி முதல் வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்- இ- பாஸ் பதிவு செய்ய லிங்க் இதோ..

கோவை: நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு வருகின்ற...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp