வால்பாறையில் மீண்டும் சோகம்: 8 வயது சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தை

கோவை: வால்பாறையில் 7 வயது சிறுமியை சிறுத்தை கொன்ற சோகம் மறைவதற்குள் அடுத்த துயரம் அரங்கேறியுள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட்டில், கடந்த ஜூன் மாதம் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சிறுத்தை கவ்விச்சென்றது.

சிறுமியின் தாய் கண்முன்னேயே இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பிறகு புதருக்குள் இருந்து சிறுமியின் உடல் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை அகப்பட்டது. அதனை வனத்துறையினர் டாப் ஸ்லிப் அடர் வனத்திற்குள் விடுவித்தனர். அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரம் அரங்கேறியுள்ளது.

Advertisement

வால்பாறை பெவர்லி பகுதியில் தங்கி பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் 8 வயது மகன் நூர் இஸ்லாம். சிறுவன் இன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று சிறுவனைக் கவ்விச்சென்றது. இதனையறிந்து கதறிய சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

Advertisement

அங்கு வந்த வனத்துறையினர் சிறுவனைத் தேடினர். அப்போது வீட்டின் அருகே உள்ள புதருக்குள் சிறுவன் சடலமாக கிடந்தார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர். இணைய இங்கே சொடுக்கவும் 👈

வால்பாறையில் அடுத்தடுத்து நடைபெறும் சிறுத்தை தாக்குதல்களால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.