கால் பாத வலியால் அவதியா? காலணியும் ஒரு காரணம்! நிவாரணம் தரும் சிறந்த காலணிகள் தொகுப்பு!

Best Slippers & Shoes: கால் பாத வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்குத் தீர்வைத் தரும் விதமாக சந்தையில் இதற்கென தயாரிக்கப்பட்ட பிரத்தியேக காலணிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

மனித வாழ்வில் வயது அதிகரிக்கும் போது, உடலின் பல பாகங்களும் பலவீனமடைகின்றன. அதில் அதிகம் தொந்தரவு தரக்கூடிய ஒன்று கால் வலி.

தினசரி நடப்பது, வீட்டுப் பணிகள் செய்வது, வெளியில் செல்வது போன்ற எளிய செயல்களிலும் கால் வலி அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை உண்டாக்குகிறது.

இதற்கான காரணங்கள் பல இருக்கலாம் – மூட்டு வலி, எலும்பு பலவீனம், சர்க்கரை நோய், நரம்பு பிரச்சினைகள் அல்லது அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாதாரண காலணிகள் போன்றவையும் இதில் அடங்கும்.

பெரும்பாலான முதியவர்கள் பயன்படுத்தும் சாதாரண shoe அல்லது சரியான ஆதரவில்லாத காலணிகள், கால் வலியை அதிகப்படுத்தும்.

பாதம் சரியான ஆதரவு பெறாவிட்டால், முழங்கால் மற்றும் முதுகு வலியும் கூட ஏற்படும். இந்த பிரச்சினையை போக்கவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆரோக்கிய காலணிகள் மற்றும் ஷூ-க்கள் சந்தையில் கிடைக்கின்றன.

இவை பாதத்தின் வளைவிற்கு ஏற்றபடி இருக்கும்; குஷன் கொண்ட மற்றும் நழுவாத அடித்தளங்கள் நடைபயிற்சியை எளிதாக்குவதோடு, பாத வலியிலிருந்தும் சற்று ஆறுதல் கொடுக்கின்றன.

உடல் நலனைக் கருத்தில் கொண்டு சரியான காலணிகளைத் தேர்வு செய்வதும், நமது மன அமைதியை மேம்படுத்தும்.

ஆரோக்கியமான கால்கள் – ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முதல் படி என்பதில் சந்தேகமே இல்லை என்பதால், கால் பாத வலிகளுக்கு ஆறுதல் தரும் சில காலணிகளை இங்கே தொகுத்துள்ளோம்.

முழுக்க முழுக்க இணையதளத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், படித்த கட்டுரைகள் மூலமாக மட்டுமே இவை தொகுக்கப்பட்டுள்ளன. தவிர, நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் இவற்றைப் பரிசோதிக்கவில்லை.

முழுக்க முழுக்க இணையதளத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், பொருட்களின் தரம் மற்றும் படித்த கட்டுரைகள், மூலமாகவே இப்பொருட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர, News Clouds Coimbatore இவற்றை பரிசோதிக்கவில்லை.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...