கோவையில் லெக் பீஸ் வைக்காத ஹோட்டலுக்கு ரூ.10,000 அபராதம்!

கோவை: கோவையில பிரியாணி கடையில் லெக் பீஸ் வைக்கவில்லை என்று கூறிய வாடிக்கையாளனுடன் தகராறு செய்த ஹோட்டல் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிரிஸ்டோபர். இவர் கடந்த ஜனவரி மாதம் அந்த பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடைக்கு குடும்பத்துடன் சாப்பிட சென்றார்.

Advertisement

அங்கே சாப்பிடுவதற்காக கிறிஸ்டோபர் முழு கோழி ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவருக்கு வைக்கப்பட்ட கோழியில் லெக் பீஸ் இல்லை. இது குறித்து கிறிஸ்டோபர் கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக கடை ஊழியர்களுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கிறிஸ்டோபருக்கு லெக் பீஸ் வைக்கப்பட்டது.

லெக் பீஸ் வைக்காதது தொடர்பாக ஏற்பட்ட தகராறால் மன வேதனை அடைந்த கிறிஸ்டோபர் இதுகுறித்து கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேலு, கடை உரிமையாளரான மணிகண்டன் ரூ. 10 ஆயிரம் இழப்பீடு மற்றும் கோர்ட்டு செலவு ரூ.5000 ஐ கிரிஸ்டோபருக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Advertisement

Hotel in Coimbatore fined Rs. 10,000 for not provide leg piece

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

டெங்கு கொசுப் பரவல்- கட்டிட உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி 50,000 அபராதம்…

கோவை: டெங்கு கொசுப் புழுக்கள் கண்டறியப்ப கட்டிட உரிமையாளருக்கு 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பத்தூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்கள் மற்றும் கலன்களில் தண்ணீரில் நிரப்பி வைப்பது, டயர்கள்....

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...