ஓட்டுப்போதுவது எப்படி? கோவையில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் விழிப்புணர்வு!

கோவை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

Advertisement

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்தும் அதில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கும் வகையில் VVPAT அடங்கிய வாகனங்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சி தலைவர் பவன்குமார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டன.

இந்த வாகனங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று தேர்தல் பணியாளர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செயல் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்றும் விழிப்புணர்வு வாகனங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்து செயல் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் வாக்களித்த பிறகு அதனை எவ்வாறு சரி பார்க்க வேண்டும் என்று முழுமையாக விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement

இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் அதனை எவ்வாறு சரி பார்க்க வேண்டும் தவறு நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முழுமையாக அறிந்து கொண்டனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...