எங்களுக்கும் லேப்டாப் வேண்டும் – கோவையில் மாணவர்கள் கோரிக்கை…!

கோவை: தமிழ்நாடு அரசின் விலையில்லா லேப்டாப் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க கோரி கோவை சட்டக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படிப்பை படிக்கும் எல்.எல்.பி இறுதியாண்டு மாணவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் அரசு கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் சட்டக்கல்லூரியில் 5 ஆண்டுகள் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், 3 ஆண்டுகள் எல்.எல்.பி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

Advertisement

இந்நிலையில் தங்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டக்கல்லூரி எல்.எல்.பி இறுதியாண்டு மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியரை இரண்டாவது முறையாக சந்தித்து மனு அளித்துள்ள அவர்கள
ஏற்கனவே இளநிலை கல்வியை, முடித்துவிட்டு வரும் நாங்கள் சட்டக் கல்லூரியில் மூன்றாண்டுகள் படிக்கும் எல்.எல்.பி படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் இதுவும் இளநிலை கல்வியில்தான் சேர்கிறது என்றனர்.

Advertisement

இந்த ஆண்டு விலையில்லா மடிக்கணினி ஐந்து ஆண்டுகள் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கும், தமிழக அரசின் மடிக்கணினியை வழங்க வேண்டும் அது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறினர்

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு- ஆன்லைன் பதிவில் கோவை முதலிடம்…

கோவை: ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. வீட்டு வசதிகள் குறித்து சுய...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...