சரவணம்பட்டி அருகே குடிநீர் குழாய் உடைந்தது- கடைகள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவதி…

கோவை: சரவணம்பட்டி அருகே பாதாள குடிநீர் குழாய் உடைந்ததால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது.

கோவை சக்தி சாலையில் சரவணம்பட்டி சந்திப்பில் ராட்சத பாதாள குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Advertisement

கோவை சக்தி சாலை சரவணம்பட்டி சந்திப்பில் நேற்றிரவு, சாலையின் கீழே உள்ள ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல லட்சம் லிட்டர் குடிநீர் அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

ஒரு கட்டத்தில் அதனை சரி செய்ய கொண்டுவரப்பட்ட ஜேசிபி வாகனமும் குழாய் உடைந்த பகுதியில் சரிந்து உள்ளே விழுந்ததால் அதனை மீட்க நீண்ட நேரம் போராடினர். சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் குழாயை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்தப் பகுதி மாநகர பகுதிக்கு வரக்கூடிய பிரதான பகுதியாக இருப்பதால் சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலிலும் சிக்கின. ராட்சதக் குழாயை சரி செய்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Advertisement

Recent News

திருப்பரங்குன்றம் விவகாரம்- திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த வானதி சீனிவாசன்…

கோவை: திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக சாடியுள்ளார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய மகளிரணி...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp