கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டை உடைத்து கொண்டு வெளியே வந்த காட்டுயானை…

கோவை: கோவையில் காட்டு யானை வீட்டின் கூரையை இடித்து வெளியே வருவதனை பார்த்து கதறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…

கோவை, தொண்டாமுத்தூர் அருகே நல்லூர் பதி பழங்குடிகள் மலை கிராமத்தில் வசித்து வருபவர் குஞ்சம்மாள் என்ற மூதாட்டி. பழங்குடி மூதாட்டி குஞ்சம்மாள் வீட்டிற்கு அந்த ஒற்றை கொம்பு (தந்தம்) யானை, அவர் வீட்டின் கூரையை பிரித்து பந்தாடியது. அதனைப் பார்த்த அங்குள்ள ஒருவர் தனது அலைபேசியில் படம் பிடித்துள்ளார்.

ஐயோ … உள்ளே போ … உள்ளே போ … என கத்தி கூச்சலிடுகின்றனர். யானை ஆக்ரோஷமான இந்த நகர்வின்பொழுது அங்கு இருந்த ஒரு ஆடு பரபரப்பாக ஓடியது. மூதாட்டி வீட்டருகே யானை வந்த பொழுது யாரும் அப்பகுதியில் இல்லாததால் வேறு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. வீட்டின் கூரை சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றது. ரோந்து பணியில் இருந்த வனத்துறை யானையை விரட்டி வனத்திற்குள் விட்டனர்.

Advertisement

வறட்சி காலங்களில் யானை ஊருக்குள் உலா வரும் நிலையில், தற்போது மழைக் காலங்களில் யானை ஊருக்குள் உலா வருவது பொது மக்களுடைய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. யானை ஊருக்குள் வராதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடிகள் மற்றும் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள் வனத்துறைக்கு அறிவுறுத்தி இருக்கின்றனர்.

வீடியோ காட்சிகள் இதோ…

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அறிவித்தால் எதிர்ப்போம்- கோவையில் ஓபிசி கட்சியினர் தெரிவிப்பு…

கோவை: வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை அறிவித்தால் 251 சமுதாயத்தினர் எதிர்ப்போம் என ஓபிசி மக்கள் உரிமை கட்சியினர் தெரிவித்துள்ளனர். கோவையில் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

Latest News Coimbatore

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

கோவை: அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற பெண் நோயாளிக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில்...