நாளை அக்ஷயதிருதியை… வாங்கினால் பெருகுமாம்; வாங்கும் விலையிலா தங்கம்? இன்றைய விலை!

கோவை: நாளை அக்ஷயதிருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.

அக்ஷயதிருதியை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் செய்யப்படும் முதலீடுகள் தொடர்ந்து வளரும் என்பது மக்களிடையே உள்ள ஐதீகம். இதனால் மக்கள் அக்ஷயதிருதியை தினத்தில் நம்பிக்கையோடு தங்கம் வாங்கி வருகின்றனர்.

நகை விற்பனையாளர்களும் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகளை இந்த நாளில் வழங்குகின்றனர். நாளை பலரும் தங்கம் வாங்க தயாராகி வரும் நிலையில், ஏழை மக்களுக்கு தங்கம் கனவாகிப் போகும் நிலையில் உள்ளது. அதன் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. கோவையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.8,980க்கும், ஒரு பவுன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

18 கிராம் ஆபரணத் தங்கமும் பவுனுக்கு ரூ.240 விலை அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,435க்கும், ஒரு பவுன் ரூ.59,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.111க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அறிவித்தால் எதிர்ப்போம்- கோவையில் ஓபிசி கட்சியினர் தெரிவிப்பு…

கோவை: வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை அறிவித்தால் 251 சமுதாயத்தினர் எதிர்ப்போம் என ஓபிசி மக்கள் உரிமை கட்சியினர் தெரிவித்துள்ளனர். கோவையில் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

Latest News Coimbatore

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

கோவை: அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற பெண் நோயாளிக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில்...