கோவையில் மாஜி போலீஸ்காரரை தாக்கிய தந்தை, மகள் மீது வழக்கு

கோவையில் மாஜி போலீஸ்காரரை தாக்கிய தந்தை, மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது…

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் மணி(63). ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது தாயார் மணியக்காரம்பாளையம் இளங்கோவன் நகரில் வசிக்கும் மற்றொரு மகன் நடராஜன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், உடல் நல பாதிப்பு ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரை பார்க்க மணி சம்பவத்தன்று தனது சகோதரர் வீட்டுக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த நடராஜனுக்கும், மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் மற்றும் அவரது மகள் ரஞ்சனி ஆகியோர் மணியை தாக்கினர். சப்பாத்தி கட்டையால் தாக்கியதில் கை உள்ளிட்ட இடங்களில் மணிக்கு காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீசார் நடராஜன், ரஞ்சனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

உலக இரத்ததான தினம்- இரத்ததானம் செய்த எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்…

கோவை: உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ இரத்த தானம் செய்தார். உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.