ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி, சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவித்ததுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரிக்கை விடுத்தனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு பகுதிக்கு இன்று முதல் 104 அரசு பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டதால் 1,800 குடும்பங்கள் பயனடைய உள்ளன.
கிணத்துக்கடவு வட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் இரண்டு நாட்கள் தங்கி கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் நேரில் மனுக்கள் பெற உள்ளார்.
கோவை காந்திபுரத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தின் இரும்பு சாரத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பின்படி, தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை அறுவடை காலத்தில் கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் உணவு தேடி ஊருக்குள் வந்த மான் கூட்டம், கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே சாலையோர குப்பை மேட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை தின்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள கால்பந்து மைதானத்தை கார் பார்க்கிங்காக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து முதியோர் கால்பந்து சங்கத்தினர் மனு அளித்தனர்.