முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவு தினத்தையொட்டி, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டு, பேரறிஞர் அண்ணா சிலை மற்றும் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, தாய்ப்பாலின் அவசியம், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதன் பங்கு மற்றும் தாய்ப்பால் வழங்க முடியாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்து உயிர்காக்கும் பெண்களின் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் கோவையில் நடைபெற்று வருகின்றன.
கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து பக்தர்களிடையே அதிக ஆர்வம் நிலவி வருகிறது. ஆடி வெள்ளி வழிபாடு குடும்ப நலம், திருமண யோகம், செல்வ வளம் மற்றும் மன அமைதியை வழங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
கோவை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தின் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் 21,242 மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். 167 பள்ளிகளில் தினமும் சத்தான உணவு வழங்கப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பின்படி, அறுவடை காலத்தில் தரமான கத்திரிக்காயின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.37 முதல் ரூ.38 வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப விவசாயிகள் விதைப்பு முடிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆகஸ்ட் 7 முதல் நான்கு இடங்களில் சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடைபெற உள்ளது.
கோவை லூலூ மால் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து விலை உயர்ந்த ஹெல்மெட்டை இளைஞர் - இளம்பெண் ஜோடி திருடிச் சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெற்கு மண்டல தடகளப் போட்டிகள் கோலாகலமாக தொடங்கின. 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வீட்டுக்குள் புகுந்து 22 வயது இளைஞரை அரிவாள் மற்றும் சுத்தியலால் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.