பிரதமர் வருகை: கோவை ஏர்போர்ட்டில் கட்டுப்பாடுகள்!

கோவை: பிரதமர் மோடி வரும் 19ம் தேதி கோவை வருவதை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பார்க்கிங் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை விமான நிலைய இயக்குனர் கூறியதாவது:-

Advertisement

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களால் வரும் நாட்களில் வாகன நிறுத்தம் மற்றும் டெர்மினல் அணுகுமுறையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 20ம் தேதி வரை விமான நிலைய டெர்மினல் முன் மற்றும் ‘Y’ ஜங்ஷன் பகுதியில் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை இந்த பகுதிகளில் எந்தவொரு வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை.

விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் அகற்றப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். இரவு நிறுத்தம் தேவையிருந்தால், பார்கிங் பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

நவம்பர் 18ம் தேதி காலை 6 மணி முதல் நவம்பர் 19ம் தேதி மாலை 6 மணி வரை டெர்மினல் முன்பகுதியில் மற்றும் Y-ஜங்ஷனில் எந்தவொரு வாகனத்தை நிறுத்தவும் முழுமையாகத் தடை செய்யப்படுகிறது.

டெர்மினல் முன் 3 நிமிடத்திற்கு மிகாமல் பிக்கப்–டிராப் வசதி தொடர்ந்து வழக்கம் போல் அனுமதிக்கப்படுகிறது.

புதிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்டுகளை அறிய, கோவை சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் சேனல்களில் தொடர்ந்து கவனிக்கலாம்

இவ்வாறு விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் அறிவிப்புகள் நமது செய்தித்தளத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும். இணைந்திருங்கள்.

Recent News

Video

Join WhatsApp