கோவை: தமிழக முதல்வர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ஜ கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தவெக வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.
கோவை தமிழக வெற்றிக்கழக ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளர் சதீஷ் மற்றும் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் முதல்வர் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது புகார் அளித்தனர்.
அந்த புகாரில், தமிழக முதலமைச்சர் விஜய் மீது திமுகவைச் சேர்ந்த 4 நபர்கள் வெவ்வேறு ஐ.டி. முகவரியிலிருந்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு உள்ளனர் என்றும்
தமிழக முதல்வரைப் பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் அவதூராக பேசி தமிழக முதல்வருக்கு நற்பெயர் மற்றும் நன்மதிப்பை கெடுக்கும் வண்ணம் அவதூறு பரப்பி வருகிறார்கள் என்றும்
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
அந்த வீடியோவை ரத்து செய்வதோடு அவர்களது இணையதள முகவரியையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.



