கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழை- சுண்ணாம்பு கால்வாய் அணைகட்டு திறப்பு

கோவை: கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் அணைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது…

Advertisement

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முழுவதும் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது.

அதே சமயம் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, கோவை குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் மாலைக்கு மேல் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நொய்யல் ஆற்றில் அதிகமான நீர் வந்ததால் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள சுண்ணாம்பு காலவாய் அணைக்கட்டு தற்பொழுது திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

இது போன்ற சமயங்களில் பொதுமக்கள் நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சித்ரா பெளர்ணமி- கோவையில் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி…

கோவை: கோவையில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சிகரம் கலைக்குழுவினரின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை துடியலூர் அருகே ஜங்கமனநாயக்கன்பாளையத்தில் சித்ரா பெளர்ணமியை ஒட்டி ராஜ கணபதி திருக்கோவிலில் சிகரம் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...