கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழை- சுண்ணாம்பு கால்வாய் அணைகட்டு திறப்பு

கோவை: கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் அணைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது…

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முழுவதும் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது.

அதே சமயம் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, கோவை குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் மாலைக்கு மேல் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நொய்யல் ஆற்றில் அதிகமான நீர் வந்ததால் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள சுண்ணாம்பு காலவாய் அணைக்கட்டு தற்பொழுது திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

Advertisement

இது போன்ற சமயங்களில் பொதுமக்கள் நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வேண்டுமென்றே புறக்கணிப்பு: கோவையில் அரசுப் பணி ஒப்பந்ததார்கள் குமுறல்…! நடவடிக்கை பாயுமா என்று எதிர்பார்ப்பு…

கோவையில் உள்ள அரசு கட்டிடத்தின் பராமரிப்பு நிலை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. கட்டிடத்தின் வெளிப்புற சுவர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், பராமரிப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.