முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோர்களுக்கான குறைதீர்வு முகாம்- விவரங்கள் இதோ…

கோவை: படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கான குறைதீர்வு முகாம் கோவையில் நடைபெற உள்ளது.

09.06.2026 அன்று மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் (The Madras Engineer Group Records) ஆவணக் காப்பகம் நடத்தும் திரளணியில், இராணுவத்தின் அனைத்து படைப்பிரிவுகளிலும் பணியாற்றி போரில் உயிர்நீத்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் சார்ந்தோர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான ஓய்வூதியம்SPARSH மற்றும் இதர குறைகளுக்கான குறைதீர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

09.06.2026 அன்று காலை 09.00 மணியளவில் பீளமேடு அவினாசி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. எனவே, இராணுவத்தின் அனைத்து படைப்பிரிவுகளிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்கள் மற்றும் வீரமங்கையர் (Veer Naris) ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

முகாமிற்கு, படைப்பணிச் சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.