கோவையில் பெய்த கனமழை- அரசு பள்ளி சுற்றுசுவர் மீது விழுந்த மரம்…

கோவை: கோவையில் அரசு பள்ளி சுற்றுசுவர் மீது சாய்ந்த மரத்தால் சுற்றுசுவர் பலத்த சேதமடைந்தது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி கோவையில் நேற்று மாலை துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், தடாகம் சாலை இடையர்பாளையம் கணுவாய் சோமயனூர் திருவள்ளூர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்து பல பகுதிகளில் மின் கம்பிகள் மீது விழுந்து மின் தடையும் ஏற்பட்டது. இந்நிலையில் கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் நேற்று மாலை பலத்த பெய்த காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக மரங்கள் வேரோடு சாந்தன.

Advertisement

இதில் அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது.
இதன் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் பலத்த சேதம் அடைந்துள்ளது. காற்றின் வேகத்தால் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த சோலார் பேனல்கள் பறந்து வந்து தரையில் விழுந்ததுள்ளது. மேலும் சாலையின் குறுக்கே விழுந்தன.

இதையடுத்து மழை நின்றதும் இரவு மாநகராட்சி ஊழியர்கள் அறுவை இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மரத்த்தின் ஒரு பகுதியை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அறிவித்தால் எதிர்ப்போம்- கோவையில் ஓபிசி கட்சியினர் தெரிவிப்பு…

கோவை: வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை அறிவித்தால் 251 சமுதாயத்தினர் எதிர்ப்போம் என ஓபிசி மக்கள் உரிமை கட்சியினர் தெரிவித்துள்ளனர். கோவையில் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

Latest News Coimbatore

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

கோவை: அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற பெண் நோயாளிக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில்...