கோவை: ஜி டி மேம்பாலத்தில் ஐந்து நாட்களுக்கு இரவு நேரத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை ஜிடி மேம்பாலத்தில் ஐந்து நாட்களுக்கு இரவில் பயணம் செய்ய அனுமதி இல்லை என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கோவை மாநகர் அவிநாசி சாலையில் உள்ள ஜிடி மேம்பாலத்தில் வருகின்ற 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் Optical Fiber Cable பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக உயர்மட்ட மேம்பாலத்தில் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டுநர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.


