இயக்க மாட்டோம்: கோவையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் திட்டவட்டம்!

கோவை: தீர்வு எட்டும்வரை தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று கோவையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் நம்மிடம் கூறியதாவது:-

கடந்த 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த திட்டத்தின்படி இந்தியா முழுவதும் ஆம்னி பேருந்துகளை இயக்க ஒன் இண்டியா திட்டத்தில் வரி செலுத்தினோம். ஆனால், அதன் பிறகும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு தனியாக வரி விதித்தது.

ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்ய தொடங்கியதால் தற்பொழுது கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் தமிழக ஆம்னி பஸ்களுக்கு அந்த மாநில அரசு தனியாக வரி விதித்து ஆம்னி பேருந்துகளை சிறை பிடித்து வருகிறது.

Advertisement

இதனால் தொழில் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் கடந்த நான்கு நாட்களாக தமிழக ஆம்னி பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசிற்க்கும் இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக துறை சார்ந்த அமைச்சரை சந்தித்து பேசிய பிறகும் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கு நல்ல தீர்வு எட்டும்வரை தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் இயங்காது.

Advertisement

இவ்வாறு அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...