கோவை: கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைமையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறத்து தொடர்புடைய துறைச்சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் தலைமையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தொடர்புடைய துறைச்சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமிசட்டமன்ற உறுப்பினர்கள் என்.எம்.சுகுமார் (சூலூர்), கனிமொழி சந்தோஷ் (கவுண்டம்பாளையம்), நித்தியனந்தன் (பொள்ளாச்சி), சுதாகர் (வால்பாறை), ஸ்ரீகிரி பிரசாத் (சிங்காநல்லூர்), மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், துணை ஆணையர் முருகேசன், அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பேரூராட்சிகள் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை.
கூட்டுறவுத்துறை, மாநகராட்சி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, வனத்துறை, பொதுச் சுகாதாரத்துறை.
உயர்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தொழிலாளர் நலத்துறை. முன்னோடி வங்கி தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்ககம் (மகளிர் திட்டம்) பொதுப்பணித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை தாட்கோ.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம். நீர்வளத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.


