கோவை: சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைமையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் தலைமையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுகுமார், கனிமொழி சந்தோஷ், நித்தியனந்தன், சுதாகர், ஸ்ரீகிரி பிரசாத், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தொழிலாளர் துறை அலுவலர்கள், ராமகிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவியர்கள் அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து. சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கையொப்பமிட்டு, கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.


