குடிமைப்பணிகள் குரூப் 2 தேர்வு- கோவை மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு…

கோவை: கோவையில் குடிமைப்பணிகள் தேர்வுகள் குரூப் 2 நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோயம்புத்தூர் மாநகர் டவுன்ஹால் பகுதியில் உள்ள செயின்ட் மைக்கல்ஸ் மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகள் (தொகுதி-II பணிகள்) 22.02.2026 முற்பகல் 09.30 முதல் 12.30 வரை Group-II Main Examination Descriptive Type கோயம்புத்தூர் மாவட்டத்தில் 103 தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.

தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தனி ஆய்வு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்வு மையத்தின் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், தேர்வர்கள் எளிதாக செல்லும் பொருட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேர்வு மையத்திற்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் (May I Help You) TNPSC சிறப்பு உதவி மையம் கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம், கோயம்புத்தூர் மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதற்கான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு 0422-2301114, 0422-2301115, 0422-2301116, 0422-23009700, 9498181213, 94425 01929, 8825772866
ஆகியவை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேர்வு அறைக்குள் கைப்பேசி, மின்னணு கடிகாரம், கால்குலேட்டர் போன்ற மின்னணு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்குள் நுழைவு சீட்டுடன் செல்லவும் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...