ஐ.டி நகரா இது? சரவணம்பட்டியில் நெரிசல்; சிக்கித் தவிக்கும் மக்கள் – வீடியோ

கோவை: சரவணம்பட்டி பகுதியில் ஐ.டி நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருவதாக அப்பகுதியினர் புலம்பல்.

கோவை சரவணம்பட்டி சுற்றுவட்டாரம் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உருவெடுத்துள்ளது. கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து இளைஞர்கள் இங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

Advertisement

ஏராளமான நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதி இது என்பதால் சரவணம்பட்டி சுற்றுவட்டாரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இரவு நேரத்தில் செப்பனிடப்படாத சாலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சரவணம்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள முக்கிய சாலைகளை விரிவுபடுத்தி, தரம் உயர்த்தி அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஐ.டி ஊழியர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recent News

குடியரசு துணை தலைவர் வருகை- கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை…

கோவை: குடியரசு துணை தலைவர் வருகையை முன்னிட்டு கோவையில் 2 தினங்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைப் புரிவதை முன்னிட்டு, பாதுகாப்பு...

Video

கோவை ஆட்சியர் கொண்டாடிய பொங்கல் விழா- களைகட்டிய அலுவலகம்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு...
Join WhatsApp