வெள்ளியங்கிரி மலை சென்றவர் உயிரிழப்பு; பக்தர்களே கவனம்!

கோவை: வெள்ளியங்கிரி மலை சென்ற பக்தர் இரண்டாவது மலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பிரசித்திபெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த காலகட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் பாத யாத்திரையாகச் சென்று, 7வது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிப்பது வழக்கம்.

Advertisement

அந்த வகையில் வெள்ளியங்கிரி மலை ஏற தற்போது வனத்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி வருகின்றனர்.

இதனிடையே திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவா (வயது 36) என்ற பக்தர் தனது குழுவினருடன் நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறினார். 7வது மலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அனைவரும் கீழே இறங்கியுள்ளனர்.

இரண்டாவது மலைக்கு வரும் போது சிவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கியுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

உடல் நலக்குறைபாடு மற்றும் சுவாசக்கோளாறு உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற வேண்டாம் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை விருந்தீஸ்வரர் கோவில் திருவீதி உலா அன்னதானம்…

கோவை: வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் பிரதோசம் விழா சுவாமி திருவீதி உலா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...