தமிழக அரசை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் தமிழக அரசு கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

16 சதவீத ஊதிய உயர்வில் 10 சதவீதம் மட்டுமே வழங்கிய EMRI-GHS நிறுவனத்தை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த்தை மீறி EMRI-GHS நிறுவனம் தன்னிச்சையாக முடிவு செய்து கடந்த 4 ஆண்டுகளாக வழங்கிய 16 சதவீத ஊதிய உயர்வில் 10 சதவீதம் மட்டும் இந்த ஆண்டு வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

மீதமுள்ள 6 சதவீத்ததை திருடி உள்ளதாக குற்றம் சாட்டிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் உடனடியாக அந்த ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதுமட்டுமின்றி 12 மணி நேரம் வேலை செய்வதாகவும் அதற்கான ஊதியமும் கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்தனர்.

Advertisement

108 ஆம்புலன்ஸ் பலரும் பழுதடைந்து உள்ள நிலையில் அது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து சரி செய்யுமாறு கூறினால் நிதியில்லை என்று அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் தெரிவித்தனர். எனவே இந்த போக்கை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

கோவையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 10,000 மரக்கன்றுகள்- பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…

கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் கொண்டம்பட்டி ஊராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேய்ச்சல் நிலத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.