கோவையில் ஐடி பெண் ஊழியரின் தவறான முடிவு

கோவை: ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் முறியாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா (25). இவர் கோவை இடையர்பாளையம் பகுதியில் தங்கிருந்து கடந்த 6 மாதமாக காந்திபுரத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த ஒரு வருடமாக தன்னுடன் பணிபுரிந்து வரும் ஒருவரை காதலித்து வந்துள்ளர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காதலன் தனது காதலி சந்தியாவின் தாயார் ருக்குமணிக்கு போன் செய்தார்.

அப்போது சந்தியா விஷத்தைக் குடித்து விட்டதாகவும், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ருக்குமணி உடனே கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் டாக்டர்கள் வரும் வழியிலேயே சந்தியா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியா எதற்காக விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News

Video

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குரங்கு- மக்கள் அச்சம்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த குரங்கு ஒன்றால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த நூற்றுக்கணக்கான அலுவலர்களும்...
Join WhatsApp